<< திண்ணை                   அழகான அகராதி >>
 
Jul
08
    
ஸ்ரீ - Category ஜஸ்ட் மொக்கைஸ் in 2008
Add Comments

காமெடி பண்ணி ரொம்ப நாளாச்சு. என்னைய வெச்சே எத்தனை நாள் தான் காமெடி பண்றது? இன்னும் நிறைய சுவாரசியமான தகவல்கள் என் நினைவுகளில் இருந்தாலும் அதெல்லாம் யோசிச்சு பதிவெழுத சோம்பேறித்தனமா இருக்கு. அதுவும் இல்லாம வாசகர் ஹிட் வாங்கணும்னா ஏதாவது மொக்கையா இல்லை நக்கலா எழுதுனா தான் கிடைக்கும்னு ஒரு பெரிய வலைப்பதிவர் (!) சொன்னாங்க. சரி இப்போ என்ன எழுதலாம்னு யோசிச்ச போது வரப்போற ஒரு படத்தை பத்தி எழுதலாம்னு தோணுச்சு. “படம் வரதுக்கு முன்னாடியே என்ன எழுத போற?” அப்டின்னு கேக்குறீங்களா? அட அது என்ன பெரிய விஷயமா? சிலர் படம் இப்படித்தான் இருக்கும்னு சுலபமா சொல்லிடலாம். ஓவர் டு த போஸ்ட்.


1. பஞ்ச பூதம் ரொம்ப முக்கியமா நினைக்கிறார் போல. அதனால தான் போன ரெண்டு படத்துலயும் அறிமுக காட்சியில் அவைகளை ஒன்றன் பின் ஒன்னா உபயோகிச்சிக்கிட்டு வரார். போன படத்துக்கு முந்தின படத்துல ஷுவுல (Shoe shhhhhh…. shhhhh….) இருந்து நெருப்பு பறந்தது. அதுக்கு அடுத்து வந்த படத்துல காலாலயே சுழல் வரவெச்சாருங்கோ. அதனால் அடுத்த பஞ்ச பூதத்துல எதை யூஸ் பண்ணி இருப்பாங்க? ஒரு வேளை சூவுல தண்ணி ரொப்பி பின்னாடி சின்ன ஓட்டை போட்டு நடக்கும் போது ‘புஸ்ஸ்ஸ்ஸ்’னு தண்ணி அடிக்கிறா மாதிரி இருக்குமா? இல்லை வேற ஏதாவது பஞ்ச பூதத்தை உயயோகித்திருப்பாங்களா? (சங்கி மங்கி நடக்க வையாபுரி டீ குடிக்கும் போது ஒரு பஞ்சபூதம் உபயோகித்தாங்களே! அதை திரும்ப யூஸ் பண்ணி இருப்பாங்களா?) எதுவா இருந்தால் என்ன? குழந்தைங்க செருப்புல வர “கொயிங் கொயிங்” சத்தம் வருமே, அதை வெச்சா நல்லா இருக்குமுங்கோ!

2. ரெண்டு ரூம் தள்ளி ஒருவர் குடிக்கப்போகும் பூஸ்டை (Boost - Secret of our energy) தட்டிவிட எகிறி பறந்து போவது போல காட்சி இருந்தால், இந்த படத்தில் தயவு செய்து காஸ்டியூம் டிசைனர் கிட்ட கொஞ்சி கூத்தாடி (அட்லீஸ்டு நொண்டியாவது ஆடி) ரெக்கை மாதிரி செஞ்சி அவர் முதுகில் சட்டையோடு சேத்து கட்டிவிட்டிடுங்கோ நைனா!

3. சின்ன புள்ளத்தனமா ஒரு பந்தை கையில சுத்தவிட்டு அது எல்லாரையும் அடிச்சிட்டு திரும்பி வந்து விரல்லயே உக்காந்துக்குறா மாதிரி காமெடி காட்சிகள் தவிர்க்கலாம். இல்லை அதெல்லாம் இருந்து தான் ஆகணும்னு அடம்பிடிச்சா, போனா போகட்டும்னு ஒரு பூமாராங் (Boomerang) கையில குடுங்கப்பா. கொஞ்சூண்டு லாஜிக் வேணும்ல. என்ன நாஞ்ஜொல்றது?

4. சண்டையில ஆர்வத்துல சட்டைய கழட்டாம பாத்துக்கோங்கப்பா. கழட்டியாச்சுன்னா வீணா “What a man?” அப்படின்னு ஒரு டயலாக் வெக்கணும். அதுவும் “என்ன கொடுமை சார்?” டயலாக் மாதிரி காமெடி ஆகிடும். போதும் அந்த ஒரே ஒரு டயலாக் போதும் 10 வருசத்துக்கு புதுசா எதுவும் வேணாம் பிளீஸ்.

5. அடடா இந்த படத்துல ஏதாவது கேசட் வெளியீட்டு விழா மாதிரி காட்சி இருக்கா? இருந்தா எடுத்துடுங்கப்பா. அப்புறம் அங்க வநது அதை சாப்பிடாதீங்க, இதை சாப்பிடாதீங்கன்னு லெக்சர் அடிக்க வேண்டி வரும். “உருளைகிழங்கு சாப்டா வாய்வு, வாழைப்பழம் சாப்டா…………….” இப்படி எல்லாம் டயலாக் இருந்தா நல்லா இருக்காது. சோ டேக் இட் ஆஃப்.

6. குட்டிக்கதை சொல்றேன், ஜட்டிக்கதை (லக்கி தல, உங்களுக்கு போட்டியா வந்துட்டா? அதான்…) சொல்றேன்னு சீன் வேணாம்யா. தமிழ்மணம் பூராக் கதையாத் தான ஓடிக்கிட்டு இருக்கு இதுக்கு மேல என்ன கதை சொல்லிட முடியும்?

மக்களே இவ்ளோ தானா உன்னால எழுத முடிஞ்சதுன்னு கோச்சுக்காதீங்க. உங்கள் கோவம் புரியுது. எல்லாத்தையும் நானே எழுதிட்டா அப்புறம் என்ன இருக்கு? நீங்க உங்க கருத்துகளையும் சொல்லுங்க. எல்லாத்துக்கு மேலயும் “லொல்லு சபா”னு ஒண்ணு இருக்கு.

ஸ்டார்ட் மீசிக்…
-ஸ்ரீ.

Few related Posts

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!




கோபிநாத் on July 8th, 2008 at 2:38 pm

மாப்பி…ஏன் இந்த கொலைவெறி…;))

\\4. சண்டையில ஆர்வத்துல சட்டைய கழட்டாம பாத்துக்கோங்கப்பா. கழட்டியாச்சுன்னா வீணா “What a man?” அப்படின்னு ஒரு டயலாக் வெக்கணும். அதுவும் “என்ன கொடுமை சார்?” டயலாக் மாதிரி காமெடி ஆகிடும். போதும் அந்த ஒரே ஒரு டயலாக் போதும் 10 வருசத்துக்கு புதுசா எதுவும் வேணாம் பிளீஸ்.\\

சிரிப்பை அடக்க முடியல!! ;))


பூமாராங்க் லாஜிக்கா.. லாஜிக் பாத்துபடம் எடுக்கறதா யாரு சொன்னா ??எதுக்கு எங்களுக்கு லாஜிக்


ஸ்ரீ on July 8th, 2008 at 4:52 pm

@ கோபிநாத்

//மாப்பி…ஏன் இந்த கொலைவெறி…//

நோ கொலைவெறி ஒன்லி டமாஸ்.

//சிரிப்பை அடக்க முடியல!!//

ஹி ஹி. நல்லா சிரிச்சாத்தான்யா மனுசப்பயலுங்க அழகா இருப்பாங்களாம் :)


மஹாராஜா.க on July 8th, 2008 at 5:30 pm

இந்த பதிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..
எங்க தலைவர் பத்தி யாருப்பா அது இப்படி சொல்றது..
உனக்கு இது தான் லாஸ்ட் பதிவா இருக்கணும்,..தலைவர பத்தி எழுதுறதுக்கு…

அதிகமா பிடிலு உடுற ஆம்பளைக்கு நல்ல பிகரு கிடைச்சதா சரித்திரமே இல்ல.
நான் உன்ன நெக்ஸ்ட் பதிவுல சந்திக்கிறேன்..

பின்குறிப்பு :
இதே பதிவை வில்லு படத்துக்கு எழுதி இருந்தா நானே உங்களுக்கு ஒரு ஐம்பத்து பின்னூட்டம் போட்டு இருப்பேன்..


ஸ்ரீ on July 8th, 2008 at 6:57 pm

@ கயல்விழி முத்துலெட்சுமி

//பூமாராங்க் லாஜிக்கா.. லாஜிக் பாத்துபடம் எடுக்கறதா யாரு சொன்னா ??எதுக்கு எங்களுக்கு லாஜிக்//

அக்கா அது தான கா திரும்ப கைக்கே வரும். அதை லாஜிக்னு சொல்லக்கூடாதா? டீக்கே கா நீங்க சொன்னா சரி தான் லாஜிக் இல்லாமலே இருந்துட்டு போகட்டும் :)


ஸ்ரீ on July 8th, 2008 at 7:02 pm

@ மஹாராஜா.க

//இந்த பதிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..//

இஜ் இட் சொரிங்க ஆப்பிசர் நீங்க கோவப்படுவீங்கன்னு தெரியாம எழுதிட்டேன்.

//எங்க தலைவர் பத்தி யாருப்பா அது இப்படி சொல்றது..
உனக்கு இது தான் லாஸ்ட் பதிவா இருக்கணும்,..தலைவர பத்தி எழுதுறதுக்கு…//

சரிங்க் ஆப்பீசர். நான் என்ன கற்பனையில் எழுதினேனா? நடந்தததான ஆப்பீசர் எழுதுனேன். இதெல்லாம் குத்தமா? ஓ மை காட்ஸ்.

//அதிகமா பிடிலு உடுற ஆம்பளைக்கு நல்ல பிகரு கிடைச்சதா சரித்திரமே இல்ல.//

பிடிலுக்கு அருஞ்சொற்பொருள் தேவை. ஏன்னா அது என்னன்னு தெரிஞ்சா கொஞ்சம் எக்ஸ்ட்ரா விடலாம்ல.

//நான் உன்ன நெக்ஸ்ட் பதிவுல சந்திக்கிறேன்..//

அட நாளைக்கு தான நெக்ஸ்ட்டு மொக்கை. மறக்காம வந்திடுங்க :)

//பின்குறிப்பு :
இதே பதிவை வில்லு படத்துக்கு எழுதி இருந்தா நானே உங்களுக்கு ஒரு ஐம்பத்து பின்னூட்டம் போட்டு இருப்பேன்..//

ஆஹா அப்போ இந்த பதிவுக்கு ஏன் நூறு பின்னூட்டம் போட்டீங்க? நீங்க ஒன்னு போட்டா….. ஹி ஹி

அப்புறம் உங்க காதல் பேருந்துல 3வது கவிதை சூப்பரு ;)


aruna on July 8th, 2008 at 7:28 pm

உங்க அட்வைஸைக் கடைப் பிடிச்சாக் கண்டிப்பா படம் 1000 நாள் ஓடப் போகுது அப்புறம் ரசிகர்கள் தலைவரை மறந்துட்டு உங்களுக்கு சிலை வைக்கப் போறாங்கப்பா!!
அன்புடன் அருணா


Senthil Kumar on July 9th, 2008 at 10:07 am

நீங்க கமல் ரசிகரா இருக்கலாம் அதுக்காக இப்படியா ஓட்றது…???


sri on July 9th, 2008 at 10:47 am

1. :-))
2. :D
3. சரிதான்..!! ;-)
4. ஆமா ப்ளீஸ்..!! :-(
5. :-S
6. :-P

Total-ah : Superrrrrrrrr…..!! :-)

ஒருத்தராவது வேணும் இப்படி இவங்கள அடக்க..!!


sri on July 9th, 2008 at 10:54 am

வில்லு படத்திற்கும் இப்படி ஒரு பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் அண்ணா..!! :D


ஸ்ரீ on July 9th, 2008 at 2:12 pm

@ aruna

//உங்க அட்வைஸைக் கடைப் பிடிச்சாக் கண்டிப்பா படம் 1000 நாள் ஓடப் போகுது அப்புறம் ரசிகர்கள் தலைவரை மறந்துட்டு உங்களுக்கு சிலை வைக்கப் போறாங்கப்பா!!
அன்புடன் அருணா//

ஹா ஹா. இதெல்லாம் இல்லாம படம் எடுத்தா அவ்ளோ தான்கா திரையில இருக்குறது யாருன்னு அவர் ரசிகர்களே சந்தேகப்படுவாங்க. ஏன்னா அவர் நிலைமை அப்படி. பண்ணித்தான் ஆகணும். ஹய்யோ ஹய்யோ!!!!


ஸ்ரீ on July 9th, 2008 at 2:15 pm

@ Senthil Kumar

//நீங்க கமல் ரசிகரா இருக்கலாம் அதுக்காக இப்படியா ஓட்றது…???//

அட அதுக்காக இல்லப்பா. அமைதியா குடும்பம் நடத்துன என்னை கடுப்பேத்துனதே சிலரது பதிவுகள் தான். அவங்களுக்கு ஒரு சின்ன சேம்பில் அவ்ளோ தான். இதையும் மீறி ஏதாவது பதிவிட்டா நானும் என் நிலை இறங்க வந்து கலாய்க்க வேண்டி வரும். எதுக்கு வீணா ஏதாவது செஞ்சிக்கிட்டு இத்தோட அமைதியா போய்டலாமே!


ஸ்ரீ on July 9th, 2008 at 2:19 pm

@ sri

//Total-ah : Superrrrrrrrr…..!! :-)

ஒருத்தராவது வேணும் இப்படி இவங்கள அடக்க..!!//

அட என்னமோ கத்திட்டு போறானுங்க கொஞ்ச நாள்ள தானா அடங்கிடுவாங்க.

//வில்லு படத்திற்கும் இப்படி ஒரு பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் அண்ணா..!!//

பாவம்மா டொக்டர் விஜய். அவர் பாட்டுக்கு பிளாப் குடுத்துகிட்டு அமைதியாத்தான இருக்காரு. அவரை தொல்லை பண்ணவேனாமே! :)


Z on July 11th, 2008 at 7:42 am

Thalaivarai patri avathooru koorum intha pathivai Naan kannaa pinnaavaaga vanmaiyaaga kandikiren….


ஸ்ரீ on July 11th, 2008 at 5:55 pm

@ Z

//Thalaivarai patri avathooru koorum intha pathivai Naan kannaa pinnaavaaga vanmaiyaaga kandikiren….//

என்ன தல இதுக்கே டென்சன் ஆகிட்டீங்க கூல் டவுன் :)

வலைப்பூவில் கமலுக்கு எதிராக நிறைய இருக்கே அதை பொறுமையாக வேண்டாம் என சொல்லி பாத்தேன் ஆனா கேக்கலையே. அதான் சின்ன சேம்பில். ஆனா நானா கற்பனை பண்ணி எழுதுனது இல்லை என்பதை நீங்க கவனிக்கனும். சரி தல உங்ககிட்ட மட்டும் சாரி கேட்டுக்கிறேன். அவங்களை நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன் :P


Sathish on July 13th, 2008 at 7:02 am

//sri said
அட அதுக்காக இல்லப்பா. அமைதியா குடும்பம் நடத்துன என்னை கடுப்பேத்துனதே சிலரது பதிவுகள் தான். அவங்களுக்கு ஒரு சின்ன சேம்பில் அவ்ளோ தான். இதையும் மீறி ஏதாவது பதிவிட்டா நானும் என் நிலை இறங்க வந்து கலாய்க்க வேண்டி வரும். எதுக்கு வீணா ஏதாவது செஞ்சிக்கிட்டு இத்தோட அமைதியா போய்டலாமே!//

இதை உங்களிடம் சற்றும் எதிர்பார்க்கவில்லை நண்பரே!

அழகான பூந்தோட்டம் போன்ற உங்களின் பதிவேட்டை சிலர்மேல் உள்ள கோபத்தால் நீங்களே சீர்கெடுப்பதா!


ஸ்ரீ on July 13th, 2008 at 12:03 pm

@ Sathish

//இதை உங்களிடம் சற்றும் எதிர்பார்க்கவில்லை நண்பரே!//

மன்னிக்கவும் சதீஷ். என் தவறை நான் உணர்ந்துவிட்டேன்.

//அழகான பூந்தோட்டம் போன்ற உங்களின் பதிவேட்டை சிலர்மேல் உள்ள கோபத்தால் நீங்களே சீர்கெடுப்பதா!//

என் கோவத்தை என்னால் அடக்கமுடியாது தோழா. இப்போது நான் தவறை உணர்ந்தாலும் மறுமுறை வேறு சிலர் பதிவெழுதி என்னை வம்புக்கிழுத்தால் பொறுமையோடு இருக்க முடியுமா என தெரியவில்லை. ஆனாலும் நீங்கள் சொன்னமைக்காக நிச்சயம் அமைதியாயிருக்க முயற்சிக்கிறேன். மன்னிக்கவும்.

Post a comment
         Please fill in the fields marked with *.
*Name: 
*Email:   (Will not be published.)
URL: 
*Comments: