<< காதல் எனப்படுவது யாதெனில்…                   திண்ணை >>
 
Jul
02
    
ஸ்ரீ - Category கவிதை, காதல் in 2008
Add Comments



நீ கண்கள் மூடி
வேண்டிக்கொள்வதால் தான்,
கடவுள் இன்னும்
கடவுளாகவே இருக்கிறார்.



#

அதென்ன?
நீ ஏற்றும்
தீபங்கள் மட்டும்
காற்றை
அணைத்து விடுகின்றன.



#

சம்மதம் வாங்க போராடுகிறார் பூசாரி.
‘என்னை கட்டிக்கொள்கிறாயா?’
என நீ கேட்கிறாயா?
பலியாடாக நான் தயார்.



#

தெப்பக்குளத்தில் கால் நனைக்காதே!
மீன் இனம்
சர்க்கரை நீரில் வாழ
இன்னும் பழகவில்லை.



#

திருவிழாவில்
உன் வீட்டார் வடம் இழுக்க,
நீ மட்டும்
என் இடம் இழுத்தபடி
நடப்பதேனோ?



#

நிதமும்
கனவில் நீ வரும்
இரவுகளுக்காக பிராத்திக்கிறார்
கடவுள்.



#

‘ஐயோ’வுக்கு அடுத்து
யார் பேரை அதிகம் சொல்கிறாய்
என்கிற போட்டி நிலவுகிறது
கடவுள்களுக்குள்.



#

திருவிழாவுக்காக இல்லை,
எல்லோரும்
நீ வார்க்கும் பாலை மட்டும்
பிரித்துக் குடிக்கும்
அன்னப்பாம்பை
பார்க்க வந்தவர்கள்.



#

காதல் அழிவதில்லை…
-ஸ்ரீ.

Few related Posts

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!




Sri on July 2nd, 2008 at 3:06 pm

Naan dhaan first..!!!


Sri on July 2nd, 2008 at 3:08 pm

Anna ella kavithai-um suuuuuuuuuuuper..!!


Senthil Kumar on July 2nd, 2008 at 3:09 pm

வழக்கம் போல கலக்கல் ஸ்ரீ…


Senthil Kumar on July 2nd, 2008 at 3:11 pm

//அதென்ன?
நீ ஏற்றும்
தீபங்கள் மட்டும்
காற்றை
அணைத்து விடுகின்றன. //

நல்ல சிந்தனை…


Senthil Kumar on July 2nd, 2008 at 3:11 pm

#
தெப்பக்குளத்தில் கால் நனைக்காதே!
மீன் இனம்
சர்க்கரை நீரில் வாழ
இன்னும் பழகவில்லை.
//

Superbbbb…


Senthil Kumar on July 2nd, 2008 at 3:13 pm

#
திருவிழாவில்
உன் வீட்டார் வடம் இழுக்க,
நீ மட்டும்
என் இடம் இழுத்தபடி
நடப்பதேனோ?//

வடம், இடம்… Yeppadiyoo neenga Enga manasila Edam pudicheeteengaaaaaaaaaa…


கோபிநாத் on July 2nd, 2008 at 3:13 pm

\\அதென்ன?
நீ ஏற்றும்
தீபங்கள் மட்டும்
காற்றை
அணைத்து விடுகின்றன. \\

\\தெப்பக்குளத்தில் கால் நனைக்காதே!
மீன் இனம்
சர்க்கரை நீரில் வாழ
இன்னும் பழகவில்லை.\\

டாப்பு மாப்பி ;))


ஸ்ரீ on July 2nd, 2008 at 3:13 pm

@ Sri

//Naan dhaan first..!!!//

எப்பவும் நீங்க தான் முதல்ல வருவீங்க. நான் அலுவலகம் வரும் நேரம் உங்களுக்கு தான் தெரியுமே!!

//Anna ella kavithai-um suuuuuuuuuuuper..!! //

நன்றி ஹை.


ஸ்ரீ on July 2nd, 2008 at 3:15 pm

@ Senthil Kumar

//வழக்கம் போல கலக்கல் ஸ்ரீ…
நல்ல சிந்தனை…
Superbbbb…//

நன்றி செந்தில் தொடர்ந்து எல்லா வாரமும் படித்து கருத்து சொல்வதற்கு.

//வடம், இடம்… Yeppadiyoo neenga Enga manasila Edam pudicheeteengaaaaaaaaaa…//

ஆஹா உங்க மனசுல இடம் பிடிச்சிட்டேனா? ரொம்ப சந்தோஷம் நண்பரே!!

இந்த கவிதையில் சொல்ல வந்தது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். இங்கே இடம் என்பது Place என்கிற பொருளில் வராது. இடம் இங்கே Left (இடது புறம்) என்கிற பொருளில் எழுதினேன். அதாவது “இதயத்தை இழுத்துக்கொண்டு நடக்கிறாய்” என சொல்ல வந்தேன்.

குறை இருந்தாலும் சொல்லவும் செந்தில் :)


ஸ்ரீ on July 2nd, 2008 at 3:34 pm

@ கோபிநாத்

//டாப்பு மாப்பி //

நன்றி தல. “திண்ணை” ஆடிட்டீங்களா? உங்களை தான் கூப்பிடலாம்னு இருக்கேன். என்ன சொல்லுதிய?


மஹாராஜா.க on July 2nd, 2008 at 5:03 pm

Ella Kavithaiyum Summa Toppu Takkara iruku sri… Vazhthukkal.. Ippadi ellam yosikireenga.. enakku unga moolaiya oru naal borrow thara mudiyumaa? lol..


மஹாராஜா.க on July 2nd, 2008 at 5:09 pm

எனக்கு ஒன்னு மட்டும் புரியல.. என் இந்த வாரம் கடவுளுக்கு பூசை போடுறார் எங்க அண்ணா?


மஹாராஜா.க on July 2nd, 2008 at 5:10 pm

//நீ கண்கள் மூடி
வேண்டிக்கொள்வதால் தான்,
கடவுள் இன்னும்
கடவுளாகவே இருக்கிறார்.

#

அதென்ன?
நீ ஏற்றும்
தீபங்கள் மட்டும்
காற்றை
அணைத்து விடுகின்றன.
//

இது ரெண்டும் சும்மா ஜோக்கா இருக்கு,,ஸ்ரீ.


மஹாராஜா.க on July 2nd, 2008 at 5:13 pm

//தெப்பக்குளத்தில் கால் நனைக்காதே!
மீன் இனம்
சர்க்கரை நீரில் வாழ
இன்னும் பழகவில்லை.
//

நீ ஒரு நாள் கால் நனைத்ததர்க்கே பல நாள் விரதம் எடுத்து காத்து இருக்கிறது
இந்த தெப்பகுலத்து திரு மீன்கள்.

இப்படி சொல்லலாமா..? ஆனா உங்க கவிதை சும்மா சூப்பர் ரா இருக்கு.. ஸ்ரீ.


மஹாராஜா.க on July 2nd, 2008 at 5:14 pm

//திருவிழாவில்
உன் வீட்டார் வடம் இழுக்க,
நீ மட்டும்
என் இடம் இழுத்தபடி
நடப்பதேனோ?

#

நிதமும்
கனவில் நீ வரும்
இரவுகளுக்காக பிராத்திக்கிறார்
கடவுள்.

//

Once again toppu……kavithai.. super sri..


மஹாராஜா.க on July 2nd, 2008 at 5:16 pm

//‘ஐயோ’வுக்கு அடுத்து
யார் பேரை அதிகம் சொல்கிறாய்
என்கிற போட்டி நிலவுகிறது
கடவுள்களுக்குள். //

விளக்கம் ப்ளீஸ்.


மஹாராஜா.க on July 2nd, 2008 at 5:18 pm

ஏம்பா.. அன்ன பாம்பு என்று எதாவது இருக்கா?
அன்னபறவை தானே கேள்வி பட்டு இருக்கேன்,..
எனுமோ கவிஜை எழுதும் போது கொஞ்சமா சாப்டுட்டு (சாப்பாடு தான் சொன்னேன்) எழுது


ஸ்ரீ on July 2nd, 2008 at 7:48 pm

@ மஹாராஜா.க

//Ella Kavithaiyum Summa Toppu Takkara iruku sri… Vazhthukkal.. Ippadi ellam yosikireenga.. enakku unga moolaiya oru naal borrow thara mudiyumaa? lol..//

மூளையா? போன வாரம் தலை குளிக்கும் போது எங்கயோ வெச்சிட்டேங்க இடம் மறந்து போச்சு. கிடைச்சா கண்டிப்பா தரேன்.

//எனக்கு ஒன்னு மட்டும் புரியல.. என் இந்த வாரம் கடவுளுக்கு பூசை போடுறார் எங்க அண்ணா?//

அவர் கிட்ட ஆகிற வேலை ஒன்னும் இல்லங்கண்ணா. எல்லா வாரமும் முதல்ல என்ன கவிதை கைக்கு வருதோ அதை எழுதிடுவேன். மீதி இல்லாம் அதை சுத்தியே எழுதுவேன். இந்த வாரம் கடவுள் மாட்டிக்கிட்டார். எல்லாம் சிவன் செயல். ஓம் நமோ நாராயணாய (ரெண்டு பேரும் ஒன்னு தான)

//இது ரெண்டும் சும்மா ஜோக்கா இருக்கு,,ஸ்ரீ.//

ஆஹா சோக்கா இருக்குப்பான்னு சொல்லுவீங்கன்னு பாத்தா ஜோக்கா இருக்குன்னு சொல்லிட்டீங்க. சரி விடுங்க ஜோக்குன்னா ஜாலியா சிரிச்சிடுவோம்.

//நீ ஒரு நாள் கால் நனைத்ததர்க்கே பல நாள் விரதம் எடுத்து காத்து இருக்கிறது
இந்த தெப்பகுலத்து திரு மீன்கள்.
இப்படி சொல்லலாமா..? ஆனா உங்க கவிதை சும்மா சூப்பர் ரா இருக்கு.. ஸ்ரீ.//

அடடா எறக்கத்துல பிரேக் போட்டா மாதிரி இன்னா மேட்டருபா! மைண்டுல வெச்சிக்கிறேன். சோக்கா கீது பா.

//Once again toppu……kavithai.. super sri..//

Once again thanks hai.

//விளக்கம் ப்ளீஸ்.//

ஏன்னா அந்த “ஐயோ”க்கு அப்புறம் நிறைய காம்பினேஷன் வருமே. ராமா, முருகா, எக்செட்ரா, எக்செட்ரா. நம்ம ஊருல கடவுளுக்கா பஞ்சம்? அதுல யார் பேரை சொல்றான்னு கடவுள்களுக்குள் போட்டி நடக்குதாம்.

//ஏம்பா.. அன்ன பாம்பு என்று எதாவது இருக்கா?
அன்னபறவை தானே கேள்வி பட்டு இருக்கேன்,..//

இது புது வகை பாம்பு அண்ணேன். அவ ஊத்துற பாலை மட்டும் பிரிச்சி குடிக்கிறதால அந்த பேரு.

//எனுமோ கவிஜை எழுதும் போது கொஞ்சமா சாப்டுட்டு (சாப்பாடு தான் சொன்னேன்) எழுது //

அட நீங்க வேற நான் சாப்டா கவிதை எழுத மாட்டேன். நான் என்ன கண்ணதாசனா? சாப்ட உடனே தூங்க போய்டுவேன் (நானும் சாப்பாட்ட தான் சொன்னேன்).


Reegan on July 3rd, 2008 at 12:00 pm

// அதென்ன?
நீ ஏற்றும்
தீபங்கள் மட்டும்
காற்றை
அணைத்து விடுகின்றன. //

// தெப்பக்குளத்தில் கால் நனைக்காதே!
மீன் இனம்
சர்க்கரை நீரில் வாழ
இன்னும் பழகவில்லை. //

சும்மா பின்னீட்ட…
எப்பிடித்தான் எழுதுறீகளோ….


ஸ்ரீ on July 3rd, 2008 at 3:29 pm

@ Reegan

//சும்மா பின்னீட்ட…
எப்பிடித்தான் எழுதுறீகளோ….//

நன்றி ரீகன்.

இந்த கேள்விய நீங்க கேக்குறீங்களே இது நியாயமா? :)


Z on July 3rd, 2008 at 8:16 pm

:))) pattaiya kelapirukeenga


திவ்யா on July 4th, 2008 at 8:55 pm

\அதென்ன?
நீ ஏற்றும்
தீபங்கள் மட்டும்
காற்றை
அணைத்து விடுகின்றன. \\

மிக அருமையான வரிகள், சூப்பர்ப்!!!

ரசித்தேன் கவிதையை, வாழ்த்துக்கள் ஸ்ரீ!!


ஸ்ரீ on July 7th, 2008 at 11:04 am

@ திவ்யா

//மிக அருமையான வரிகள், சூப்பர்ப்!!!

ரசித்தேன் கவிதையை, வாழ்த்துக்கள் ஸ்ரீ!!//

வாழ்த்துக்கு நன்றி திவ்யா.


ஸ்ரீ on July 7th, 2008 at 11:06 am

@ Z

// pattaiya kelapirukeenga//

டேங்க்கூ ஜி :)


நவீன் ப்ரகாஷ் on July 8th, 2008 at 1:36 pm

//‘ஐயோ’வுக்கு அடுத்து
யார் பேரை அதிகம் சொல்கிறாய்
என்கிற போட்டி நிலவுகிறது
கடவுள்களுக்குள். //

ம்ம்ம்ம்….. ரசித்தேன்…
கலக்குங்க காதல் பக்தரே….
:)))


ஸ்ரீ on July 8th, 2008 at 2:22 pm

@ நவீன் ப்ரகாஷ்

//ம்ம்ம்ம்….. ரசித்தேன்…
கலக்குங்க காதல் பக்தரே…//

நன்றி தல. நான் காதல் பக்தன்னா நீங்க தான பூசாரி! சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தான பவர்ஃபுல்? :)

Post a comment
         Please fill in the fields marked with *.
*Name: 
*Email:   (Will not be published.)
URL: 
*Comments: