Jul
31
    
ஸ்ரீ - Category கவிதை in 2007

கோயிலுள்ளே பத்து ரூபாய்
போட்ட கை தான்
பிச்சைக்காரனுக்கு
ஒரு ரூபாய் தேடியது.

கோயில் காளையாகவே
பிறந்திருக்கலாம்
யோசனையில்
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jul
31
    
ஸ்ரீ - Category அசைபோடுகிறேன் in 2007

தப்பா நினைக்காதீங்க. பசங்க எப்போ வயசுக்கு வராங்கனு தெரியமாட்டேங்குதே! ஆனா பசங்க தண்ணி அடிக்க ஆரம்பிச்சா வயசுக்கு வந்தா மாதிரினு சொல்லுவாங்க. நான் வயசுக்கு வந்தது 12‍th படிக்கும் போது தான். கொஞ்சம் லேட் இல்ல? அப்போ கொஞ்சம் படிப்பாளி நான், இதெல்லாம் தெரியாது. எக்ஸ்கர்சன் அப்டின்ற பேருல வாத்தியாருங்க ஊரு சுத்த கூட்டிக்கிட்டு போவாங்க. அந்த வருசம் மெட்ராஸ் போலாம்னு சொன்னாங்க. கிளாஸ் கவனிக்காம சும்மா பின்னாடி பென்சுல பேசுரத கேட்டேன் அவனுங்க எனக்கு முன்னாடியே வயசுக்கு வந்துட்டானுங்க போல பீரை பத்தி பேசிகிட்டு இருந்தானுங்க. எனக்கு ஆசை வந்துடுச்சு சரி என்ன தான் இருக்குனு பாக்கலாமேனு அவனுங்க கிட்ட கெஞ்சுனேன். அவனுங்க சரி ஆனா நீ தான் வாங்கிட்டு வரணும்னு சொல்லிடானுங்க பாவிங்க. உடனே மாஸ்டர் பிளான் போட்டோம் நானும் என் பிரண்டு ஓணானும். அன்னிக்கு ராத்திரி தான் ஆபரேசன் பீர்.
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jul
30
    
ஸ்ரீ - Category கவிதை in 2007

சேமித்த பாவமூட்டைகளோடு
அவன் வீடு போக,
காசைப் பார்த்த கொடி மரம்
காலம் மறந்து பூக்க,
காந்திக்கு ஐயர் எங்களிடையில்
கண்ணாமூச்சி நடத்த,
புறப்பட்டேன் அவனை
தேடி நானே!

துரும்பை கிளறியும்,
தூணை சுரண்டியும்
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jul
30
    
ஸ்ரீ - Category அசைபோடுகிறேன் in 2007

நண்பர்களே!

ரொம்ப நாள் கழிச்சு நான் படித்த கல்லூரி பக்கம் போயிருந்தேன். பின் நோக்கி போகிற சுகமே தனி தான். முதல்ல போக‌ணுமானு தான் யோசித்தேன். நான் காதல் பழகிய அந்த அழகான உலகத்த மறுபடியும் பாக்க ஏதோ என்ன இழுத்துட்டு போயிடுச்சு. என்கிட்ட நல்லா பழகுனவங்களை மட்டும் பாத்துட்டு வந்துடலாம்னு போனா அங்க எல்லாரும் அவர் ரூம்ல தான் இருக்காங்க. என்ன உருப்பட மாட்டடானு திட்டுனவங்க தான் என்ன பார்த்து சந்தோஷப் பட்டாங்க. எங்கயோ படிச்ச ஞாபகம் “வெளியேறியது பறவை, கூண்டுக்கு விடுதலை“.
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jul
25
    
ஸ்ரீ - Category கவிதை, காதல் in 2007

எங்கே போகிறது இந்த காதல்?
காதல் போயின் சாதல்
என கொதித்த மூத்த கவியின்
வார்த்தையை பொய்யாக்கும் முயற்சியோ?

கடற்கரை மணலிலும்,
அரங்குகளின் இருட்டிலும்,
பூங்காவின் புதரிலும்,
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jul
23
    
ஸ்ரீ - Category கவிதை, காதல் in 2007

என்ன வரம் வேண்டுமோ கேள்!
உறக்கத்தின் நடுவே
உரக்கக்கேட்ட குரலால் எழுந்தேன்.
தூக்கத்தை தூர எட்டி உதைக்கும் முன்
பிரகாசமாக சிரித்தான் கடவுள்.

மானிடப்பதரல்லவா சுயநலமே
முந்திக் கொண்டு வர‌
தேவலோகத்தில் ஒரு இடமென்றேன்
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jul
20
    
ஸ்ரீ - Category தொடர் கதை in 2007

இது பாகம் 8 முதல் பாகம் இதோ இங்கே. நேரம் இல்லாதவர்கள் இதை மட்டுமே தனியாகப் படிக்கலாம்.

எப்போதுமே உன்னோடு நான் இருந்து விடுவேன் என்று நினைத்து தானோ அந்த பொறாமைக்கார கடவுள் படைத்தான் இரவை. தனிமையைக் கூட சமாளித்து விடுவேன் ஆனால் உன் நினைவுகளை என்ன செய்ய? இரவோடு சேர்ந்து அவையும் இம்சை செய்தன. கனவோடு கண்ணாமூச்சி, தலையணைக்கு உயிர் தந்து அதோடு செல்ல பேச்சு, இப்படியே இரவைக் கொன்று முடித்தேன். தலையில் தீ வைத்து விட்டார்களோ? தன் கொண்டையைப் பார்த்து சந்தேகத்தில் கூவும் சேவல், மெதுவாக வெளியே வந்து சோம்பல் முறிக்கும் சூரியன், என்னைப் போலவே இரவை வெறுத்திருந்து கூட்டை விட்டு பறக்கும் புறாக்கள் அனைத்தும் அழகாகத் தெரிந்தாலும் மனம் உன்னைத்தேடியே அலைபாய்ந்தது. பால் வாங்கும் காரணம் சொல்லி கால்கள் உன் வீடு தேடி நடந்தன.


Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jul
19
    
ஸ்ரீ - Category கவிதை, காதல் in 2007

இதயப் பூவமர்ந்து
உயிர்த்தேன் குடித்து
இமைச்சிறகடிக்கும்
கருப்பு வெள்ளை
வண்ணத்துப் பூச்சுகள்
‍உன் கண்கள்.


*


கருப்பு என்ன
ஒதுக்கப்பட்ட நிறமா?
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jul
17
    
ஸ்ரீ - Category கவிதை in 2007

“நல்ல புள்ளயா படிச்சு
பெரிய ஆளாவனும்”
வேளக்காரியா அவமானப்பட்டு
முடியும் அவ வாழ்க்கயோட‌
ஆதங்கத்த கொட்டித்தீத்தா
ஆத்தா

கண்டிப்பானு நாஞ்சொல்லி
முடிக்குமுன்
போய் சேந்தா
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jul
16
    
ஸ்ரீ - Category கவிதை, காதல், சோகம் in 2007

இலையுதிர் காலத்தால்
வற‌ண்டு போன போது
என் வாசலுக்கு
வசந்தம் கொண்டு வந்தாய்

கால்களைப் பிடுங்கிக்கொண்டு
சிறகுகள் தந்து
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!