Jun
29
    
ஸ்ரீ - Category தொடர் கதை in 2007

ந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே….

இது பாகம் 4 முதல் பாகம் இதோ இங்கே.

மறுநாள் வந்த உன்னிடம் புதிதாய் வெட்கம் ஒட்டிக் கொண்டிருந்தது. ரோஜாவே அழகு ரோஜா மேல் பன்னீர்த்துளி பேரழகு. ரோஜாவா நீ? குறிஞ்சி! ரோஜா அன்றாடம் பார்க்கலாம் ஆனால் உன்னைப் பார்க்க 12 வருடம் காத்திருந்தேனே குறிஞ்சி தானடி நீ. உன் வெட்கம் தோய்ந்த சிரிப்பு என் காதலை, இப்போது நம் காதலை உறுதிப்படுத்தியது. மாலையில் பள்ளி முடிந்து நாம் இருவரும் மாந்தோப்பில்.

“எனக்கும் உன்னை பிடிக்கும்டா ஆனா நேத்திக்கு முறைச்சிட்டு போயிட்டேன்.” என்றாய் அசடு வழிய. குழம்பிப்போன ஒரு வண்டு உன் தலையை வட்டமிட்டபடி துரத்தியது.

“அத அடிக்காதமா அது என்ன செய்யும் பாவம் இவ்ளோ பெரிய பூவப்பாத்திருக்காது இதுக்கு முன்னாடி.”

“கடிக்க வந்தா சும்மாவா விடுறது?”

“சரி அப்போ அதுக்கு கொடுமையா ஒரு தண்டனை குடுப்போம்.
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jun
28
    
ஸ்ரீ - Category தொடர் கதை in 2007

இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே….

இது பாகம் 3 முதல் பாகம் இதோ இங்கே.

அந்த ஷனத்தில் இருந்து தினமும் உன் புன்னகையைச் சேர்க்கும் தேனீ ஆனேன். ஆம் உன் சிரிப்பும் கூடத் தேன் தான் எங்கிருந்து சுரக்கிறதோ தெரியாது. விளக்கிருக்கும் இடத்துக்கு தன் இற‌க்கையைக் காணிக்கையாக்கப் புறப்படும் ஈசல் போல உனக்குப் பின்னால் எப்பவுமே நான். ஆனால் கொடுக்க ஒன்றும் இல்லை என் காதலைத் தவிர, இழக்க ஒன்றும் இல்லை இந்த உயிரைத் தவிர. இரவு முழுவதும் ஒத்திகைப் பார்த்தும் உளறுவதே வழக்கமாகக் கொண்டிருந்தேன். கடவுள் நம்பிக்கை இல்லாத நான் முதன்முதலாக பிரம்மாவைத் திரும்பிப்பார்த்தேன். ஏதோ ஒரு புத்தகத்தில் நான் ரசித்த பிக்காசோவின் ஓவியத்திற்கு உயிரூட்டி அனுப்பி வைத்ததற்காக நன்றி சொன்னேன்.

நீ சுவாசித்த காற்றைத் தேடித் தேடி சுவாசித்தேன். அது நுரையீரலுக்குப் போகாமல் நேரே இதயத்துக்கு படை எடுத்தது உன்னைத்தேடி.
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jun
27
    
ஸ்ரீ - Category தொடர் கதை in 2007

இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே….

இது பாகம் 2 முதல் பாகம் இதோ இங்கே.

கண்கள் மூடியும் உன் முகமே. காதல் பழக்கமில்லாத எனக்கு இப்போது நடப்பவை எல்லாம் புதிதாய், அழகாய்.
“தேவதையைப் பார்த்தாயே கனவு காணாவிட்டால் எப்படி?” என்றவாறே கனவு தேவன் என்னை இழுத்துச் சென்றான். கருப்பு வெள்ளை கனவுகளில் இன்று ஏனோ வண்ணங்கள்.
“ஏன் இந்த வண்ணம்?” கேட்டேன் அவனிடம்.
“குழந்தாய், உனக்கு எல்லாம் விநோதமாக தெரிகிறதா? நீ பசலை நோயில் சிக்கிக்கொண்டாய்!” என்றான் அவனுக்கே உரிய தோரணையில்.
கடவுள் சொல்வதை நம்பாமலா இருக்க முடியும்?. மிதந்து வந்தாய் நீ உன் நிழலில் கூட வண்ணங்கள் வழிந்தன. “இது கலையாமலே இருக்கக் கூடாதா?” ஏங்கியது மனது. ஆனால் புத்தி, “பைத்தியக்காரா, நிழலுக்கு ஆசைப்படுகிறாயே!
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jun
26
    
ஸ்ரீ - Category தொடர் கதை in 2007

இந்த கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் கற்பனையே..

அழகான சுப்ரபாதம் கேட்க கையில் காபியோடு அம்மா. “டேய் சிவா! எழுந்திடு டா ஆபீஸுக்கு நேரம் ஆச்சு”. இரவெல்லாம் விழித்திருந்த கண்கள் என்னை தூங்க சொல்லி கெஞ்சியும் விழித்தேன். என் மற்றொரு யுகத்தை தொடங்க. அவள் இல்லாமல் நாட்கள் எல்லாம் யுகங்கள் ஆனது. அவசரமக கிளம்பியவனிடம் “அப்படியே பேங்குக்கு போயிட்டு வாப்பா” அம்மா சொன்னதும் “ம்” என்று பதில் அளித்து விட்டு புறப்பட்டேன்.

வழக்கம் போல் டீம் லீடிடம் பொய் சொல்லிவிட்டு கிளம்பினேன் பேங்குக்கு, அடுத்த மணி நேரம் மறைத்து வைத்திருந்த அதிர்ச்சி தெரியாமல். அன்று ஒரு நாள் நான் சபித்த காதல் தேவதை பழி தீர்க்க வந்திருந்தாள். நீண்ட வரிசையில் நின்றிருந்தவன், “எக்ஸ்யூஸ்மி, கேன் ஐ ஹேவ் யுவர் பென்?” என்றதை கேட்டு திரும்பினேன். திரும்பியவனுக்கு மனதில் இடி.
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



 
Jun
25
    
ஸ்ரீ - Category கவிதை in 2007

நான் பார்த்த முதல் முள் இல்லாத ரோஜா அவள்
இல்லை
ரோஜா கூட வாடி விடுமாமே!
பிறகெப்படி கூற?
தேவதை….?
ஆம் தேவதை!
இறக்கைகள் இல்லாத தேவதை
எனக்கு காதல் கற்றுத்தந்த தேவதை.
Read the rest of this entry »

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!